ஹிஸ்புல்லாவின் ட்ரோன்களை சுட்டுவீழ்த்திய இஸ்ரேல்
மத்தியதரைக் கடலில் இஸ்ரேலின் எண்ணெய் குதங்களில் ஒன்றை நோக்கி பறந்த ஹிஸ்புல்லாவின் மூன்று ட்ரோன்களை இஸ்ரேல் சுட்டுவீழ்த்தியுள்ளது.
லெபனானில் இருந்து அனு ப்பப்பட்ட இந்த ட்ரோன்கள், போர் விமானங்கள் மற்றும் கப்பலில் பொருத்தப்பட்ட ஏவுணைகள் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
அதேசமயம் கரிஷ் எரிவாயு துறையின் உரிமை தொடர்பில் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே பற்றம் நீடித்து வருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த நீண்ட கால பிரச்சினையை தீர்க்க அமெரிக்க வலுசக்தித் தூதுவர் அமோஸ் ஹொச்டைன் மத்தியஸ்தம் வகிக்கிறார்.
அதேசமயம் ஐ.நா அங்கீகரித்த தனது பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் இந்த துறை இருப்பதாக இஸ்ரேல் கூறும் அதேநேரம் அதன் சில பகுதிகளுக்கு லெபனான் உரிமை கோருகிறது.