ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் ; அமெரிக்காவிற்கு தொடர்பு இல்லை
ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
காஸாவைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக தாக்குதல் நடத்தி வந்த ஈரான் மீது 'ஒபரேசன் ரைஸிங் லயன்' என்ற பெயரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை
ஈரானின் அணுசக்தி திட்டத்தின் மையப் பகுதியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும், இஸ்ரேலுக்கு ஈரான் விடுத்த அச்சுறுத்தல் நீங்கும் வரை தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியதாவது; ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ளது.
இந்த தாக்குதலுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க படைகளின் பாதுகாப்பு பற்றியே எங்களின் கவலை உள்ளது. அமெரிக்க நிலைகளையோ, அமெரிக்க படைகளையோ ஈரான் இலக்காக வைக்கக் கூடாது. தங்களின் பாதுகாப்புக்காகவே இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவிடம் இஸ்ரேல் தெரிவித்துள்ளது, இவ்வாறு கூறினார்.