ஐரோப்பிய நாட்டில் அறிமுகமாகியுள்ள புதிய சட்டம்: கொண்டாடும் மக்கள்- ஏன் தெரியுமா?
கொரோனா பெருந்தொற்று பரவல் தொடங்கியதிலிருந்தே உலக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே மக்கள் முடங்கிய நிலையில், சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் ஒரு சில நாடுகள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு மேலாக மக்கள் வீட்டில் இருந்தபடியே பணி செய்து வருகின்றனர், இதனால் குடும்பத்தில் வன்முறை, மன ரீதியான குழப்பங்கள் அதிகரித்து விட்டன.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு போர்ச்சுக்கல் நாட்டில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது.
அதாவது, வேலை நேரம் முடிந்த பின்னர் தொழிலாளர்களை முதலாளிகள் தொடர்பு கொள்வது சட்டப்படி குற்றமாகும்.
மீறியும் அவர்களை தொடர்பு கொண்டாலோ, மெசேஜ் செய்தாலோ தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டம் 10க்கும் குறைவான தொழிலாளர்களை கொண்ட நிறுவனங்களுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.