அமெரிக்கா செல்லும் கனடியர்களுக்கு முன் எச்சரிக்கை!
அமெரிக்காவிற்குள் பிரவேசிக்கும் கனடியர்கள் இனி மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று குடியேற்ற சட்டத்தரணிகள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக தொழில் வாய்ப்பின் அடிப்படையில் பிரவேசிக்கும் கனடியர்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாங்கூவர் நகரைச் சேர்ந்த ஜாஸ்மின் மூனி, கடந்த வாரம் அமெரிக்க எல்லையில் விசா மறுக்கப்பட்டதால் 12 நாட்கள் அமெரிக்காவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
கடந்த 10 நாட்களில் அமெரிக்க எல்லையில் பல்வேறு குடியேற்ற நிலைகளுடன் கூடிய நபர்கள்—கூடவே நிரந்தர குடியுரிமை (PR) கார்டு வைத்திருந்த ஒருவரும்—காவலில் வைக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க குடியேற்ற சட்ட வல்லுநர் ஜிம் ஹாக்கிங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) மூனியை ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ஆணைக்கேற்பக் கைது செய்ததாக அறிவித்திருந்தது.
இனி எல்லை கடப்பது சாதாரண விஷயம் அல்ல" வாங்கூவரில் உள்ள குடியேற்ற சட்டத்தரணி ரிச்சர்ட் கர்லேண்ட், இந்த கடுமையான நடவடிக்கைகள் தொடரலாம் என்றும் கனடியர்கள் இனி எல்லை அதிகாரிகளை எதிர்ப்பார்த்ததை விட கடுமையாக அணுக வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
விசா முடிவுகள் எல்லையில் அதிகாரிகளின் தனிப்பட்ட முடிவுகளால் மாறுபடலாம் என்றும், கனடியர்கள் இனி எல்லை கடப்பதை எளிதாக கருத கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.