"தாலிபான்கள் உள்பட ஒருவரையும் நம்புவது இல்லை"...விரக்தியில் ஜோ பைடன்
தாலிபன்கள் உள்ளிட்ட யாரையும் தான் நம்புவது இல்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இவ்வாறு கூறிய அவர், ஆப்கனில் ஆட்சி அமைக்க சட்டபூர்வ உரிமையை தாலிபன்கள் கோருவதை தாம் நம்பவில்லை என்றார்.
ஆட்சி அமைக்க வேண்டுமானால் தாலிபன்களுக்கு கூடுதல் பொருளாதார உதவிகள், வர்த்தக வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் தேவைப்படும் என்ற அவர், அதற்கு வாய்ப்பில்லாத நிலையில் சரியான முடிவை தாலிபன்கள் எடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
ஆப்கனில் அமெரிக்க தூரதக நடவடிக்கைகளை முழுவதுமாக விலக்கிக் கொள்ள வேண்டும் என இதுவரை தாலிபன்கள் கூறவில்லை என்றும், அங்குள்ள அமெரிக்க படைகளுக்கு எதிராக தாலிபன்கள் செயல்படவில்லை என்றும் ஜோ பைடன் தெரிவித்தார்.