பதற்றங்களுக்கு மத்தியில் ஜோ பைடன் - ஜி ஜின்பிங் சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் (Joe Biden) சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் (Xi Jinping) நேற்றைய தினம் தங்களது முதல் இருதரப்பு சந்திப்பை காணொளி வாயிலாக நடத்தியுள்ளனர்.
தாய்வான், ஹொங்கொங் மற்றும் பீஜிங்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சீனாவின் மேற்குப் பகுதியான சின்ஜியாங்கில் முஸ்லிம்களை நடத்துவது உள்ளிட்ட விவகாரங்களில் இரு நாடுகளின் உறவு மோசமடைந்து வருகின்றது.
இந்த நிலையில் இரு நாட்டு அதிபர்களும் காணொளி மூலமாக பேச்சுவார்த்தையை நேற்றையதினம் நடத்தியுள்ளனர். சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் வெளிப்படையான மோதலுக்கு மாறாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு தலைவர்களாக நம் இருவருக்கும் பொறுப்பு உள்ளதக ஜோ பைடன் சந்திப்பில் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை பீஜிங்கில் இருந்து பேசிய ஜி ஜின்பிங் (Xi Jinping) , அதிபர் பைடனை (Joe Biden) "எனது பழைய நண்பர்" என்று குறிப்பிட்டார்.
அதோடு போட்டியாளர்கள் மிகவும் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும். மற்றும் சீனாவும் அமெரிக்காவும் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் சீன அதிபர் வலியுறுத்தினார்.
இதேவேளை கடந்த ஜனவரியில் ஜோ பைடன் (Joe Biden) அதிபராக பதவியேற்றதிலிருந்து இரு தலைவர்களும் இரண்டு முறை தொலைபேசியில் பேசியுள்ளனர்.
அதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் (Xi Jinping) வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை என்பதுடன் , நேருக்கு நேர் உச்சிமாநாட்டின் வாய்ப்பை நிராகரித்து வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.