நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்குத் தந்தை!
கனடாவை உலுக்கிய 'விந்து தான' மோசடி கனடாவின் கியூபெக் (Quebec) மாகாணத்தில், இதுவரை கண்டிராத ஒரு வினோதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்குத் தந்தையான தந்தை மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் இனி விந்து தானம் செய்யக்கூடாது என நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
பிலிப் நார்மண்ட் (Philippe Normand) மற்றும் அவரது மகன் டொமினிக் சீலோஸ் (Dominik Seelos) ஆகிய இருவரும்தான் இந்த வழக்கின் பிரதிவாதிகளாவர்.

தந்தை பிலிப் தனக்கு 109 குழந்தைகள் இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். மகன் டொமினிக் தனக்கு 240 குழந்தைகள் இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளார்.
ஆனால், இவர்களால் உருவான குழந்தைகளின் உண்மையான எண்ணிக்கை இதைவிட மிக அதிகம் எனப் முறைப்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நூறு குழந்தைகளின் தந்தை' (Father of 100 Children) என்ற ஆவணப்படம் வெளியான பிறகே இவர்களின் விசித்திரமான செயல் உலகுக்குத் தெரிந்தது.
இவர்களிடம் விந்து தானம் பெற்று நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த 'லோரி' (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற தாய், இவர்களுக்கு எதிராக "கருவுறுதல் மோசடி" (Fertility Fraud) வழக்குத் தொடர்ந்தார்.
தானம் செய்பவர்களின் உடல்நிலை, விந்துவின் தரம் மற்றும் எத்தனை பேருக்கு தானம் செய்துள்ளனர் என்பது குறித்து இவர்கள் பொய் கூறியுள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஒரு பெண் தனது உடல் மற்றும் குடும்பத் தேர்வுகள் குறித்து எடுக்கும் முடிவில் இவர்கள் மோசடி செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. தந்தை-மகன் உறவை மறைத்து தானம் செய்துள்ளனர் என குறிப்பிடபப்டுகின்றது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சைமன் சேம்பர்லேண்ட், நிபுணர்கள் பரிந்துரைக்கும் அளவை விட இவர்களின் குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என்று சுட்டிக்காட்டினார்.