இரத்தக்களரியான சுதந்திரதின விழா... தப்பிய துப்பாக்கிதாரி
சிகாகோ புறநகர்ப் பகுதியில் சுதந்திரதின விழா அணிவகுப்பின் போது மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 31 பேர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சிகாகோவின் ஹைலேண்ட் பூங்காவில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு அணிவகுப்பு தொடங்கிய 10 நிமிடங்களுக்குப் பிறகு துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர், 18 முதல் 20 வயதுக்குட்பட்ட வெள்ளையர் எனவும், நீண்ட கருப்பு முடி மற்றும் வெள்ளை அல்லது நீல நிற டி-ஷர்ட் அணிந்திருப்பார் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் 6 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் 31 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சம்பவத்தை அடுத்து பொலிசார் மற்றும் மருத்துவ உதவிக்குழுவினர் உதவியுடன் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சுதந்திர தின நிகழ்ச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.