பாலியல் ரீதியான தாக்குதல்: எம்பி-களுக்கு பிரதமரின் உருக்கமான கோரிக்கை
பாலியல் ரீதியான தாக்குதல் மற்றும் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு ஆதரவாக தன்னுடைய மற்றும் பிற கட்சிகளின் எம்பி-களுக்கு உருக்கமான கோரிக்கையை முன்வைத்துள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
அதாவது பாராளுமன்ற குழுக்களில் இருப்பவர்களிடம் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது அனுபவங்களை பகிரும் போது, அவர்களை பாதுகாப்பாக உணரச் செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களை கையாள்வதில் சிறப்பான அணுகுமுறை தேவை என்றும், பொது இடமாக இருந்தாலும், தனிப்பட்ட இடமாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவான சூழலை உருவாக்குவது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு காரணம் பாதிக்கப்பட்டவர்களை குழுக்களில் இருப்பவர்கள் மிக மோசமாக நடத்துவதாகவும், எம்பி-க்கள் ஒருபக்க சார்பாக நடந்து கொள்வதாகவும் பலரும் குற்றம் சாட்டியதை தொடர்ந்து பிரதமர் இதனை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.