போர்க் குற்றச் செயல்களுக்கு புட்டினே பொறுப்பு என்பது அம்பலமாகியுள்ளது
உக்ரைனில் இடம்பெற்று வரும் கொடூரமான போர்க் குற்றச் செயல்களுக்கு ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினே பொறுப்பு என்பது அம்பலமாகியுள்ளது என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட ட்ரூடோ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ட்ரூடோ உக்ரைனை விட்டு வெளியேறும் வரையில் இந்த விஜயம் பற்றிய விபரங்களை வெளியிடுவதில்லை என தீர்மானிக்கப்பட்ட போதிலும் உள்ளுர் ஊடகங்களில் இந்த விஜயம் பற்றிய செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக பிரதமர் ட்ரூடோ, உக்ரைனிய ஜனாதிபதி வொலாடிமிர் ஸெலென்ஸ்கீயிடம் உறுதியளித்துள்ளார்.
புட்டின் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றச் செயல்களுக்கு அவர் பொறுப்பு சொல்ல வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவின் கொலைகளுக்கு நீதி தேடும் நடவடிக்கைகளுக்கும் கனடா உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனுக்கு மேலும் 50 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரஸ்யா மீதான தடைகளை மேலும் மேலும் கடுமையாக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.