கிம் ஜாங் உன்னின் சகோதரிக்கு முக்கிய பதவி: வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் சகோதரிக்கு அரசில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவில் கிம் ஜாங் உன் குடும்ப ஆட்சிதான் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இவரது சகோதரியான கிம் யோ ஜாங், எந்தவொரு பொறுப்பிலும் இல்லாமல் தலைமை வகித்து வந்தார்.
கிம் ஜாங் உன்னின் முக்கிய ஆலோசகராகவும் இருந்து வந்தார், இந்நிலையில் இவருக்கு அரசில் மிக முக்கியமான முடிவு எடுக்கும் அமைப்பான தேச விவகாரங்கள் கமிஷனில் (எஸ்.ஏ.சி.) உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதை அந்த நாட்டின் அரசு ஊடகமான கே.சி.என்.ஏ. அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இது முக்கியத்துவம் வாய்ந்த முடிவாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே தென் கொரியாவுடன் இணக்கமான உறவை மீண்டும் ஏற்படுத்த வடகொரியா விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.