பல எதிர்பார்ப்புகளுடன் மகிழ்ச்சியில் இருக்கிறோம்... கனேடிய நகரம் ஒன்றில் வாழும் மக்கள்: காரணம் இதுதான்
கனேடிய நகரம் ஒன்றின் மக்கள் தாங்கள் பல எதிர்பார்ப்புகளுடன் மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். அதற்கு காரணம் வேறொன்றுமில்லை, அவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்பட உள்ளது, அவ்வளவுதான்! தடுப்பூசி போடுவதற்கா மக்கள் இவ்வளவு மகிழ்ச்சியடைகிறார்கள் என்று நீங்கள் எண்ணினால், தடுப்பூசி என்பதை வெறும் தடுப்பூசியாக மக்கள் பார்ப்பதில்லை என்பதுதான் விடயம்.
Kingston பகுதியில், 18 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போட முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அந்த நாள் எப்போது வரும் என காத்திருக்கிறார்கள். அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்கிறார்கள்.
என்னால் என் தோழிகளை மீண்டும் சந்திக்க முடியும் என்கிறார் Oliva Ho. நான் என் குடும்பத்தினரை பார்க்க விரும்புகிறேன், என் அம்மாவைப் பார்த்தே பல மாதங்கள் ஆகிவிட்டது, அவரை சந்திக்கும் நாளுக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன் என்கிறார் அவர்.
உண்மையில் Kingston பகுதி அதிக கொரோனா தொற்று உள்ள பகுதி அல்ல, ஆனாலும், மாகாணத்தின் பிற பகுதிகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால், கொரோனாவும் அதன் புது வகைகளும் பரவாமல் தடுப்பதற்காக இந்த பகுதியும் பொதுமுடக்கத்துக்குள்ளாக்கப்பட்டது.
ஆகவே, இப்போது முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டால் தங்கள் அன்பிற்குரியவர்களை சந்திக்கலாம் என்பதால் மக்கள் மகிழ்சியடைந்துள்ளார்கள்.
இன்னொரு பக்கம் தொழில் செய்வோர் மீண்டும் தொழில் துவங்கலாம் என்ற மகிழ்ச்சியில் இருக்க, தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஏன் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்பதற்கு ஆளுக்கொரு காரணம் சொல்கிறார்கள் இப்பகுதி மக்கள்.