5 வாய்ப்புகளை தவறவிட்ட கொல்கத்தா: பஞ்சாப் அணி கடைசி நேரத்தில் திரில் வெற்றி
ஐ.பி.எல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தி வெற்றிபெற்றது.
துபாயில் இடம்பெற்ற 45-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடந்து கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களான ஷுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் களமிறங்கியனர்.
சுப்மன் கில் 7 பந்துகளில் 7 ஓட்டங்கள் எடுத்திருந்த போது அர்ஷ்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ராகுல் திரிபாதி தொடக்க வீரர் வெங்கடேஷ் உடன் ஜோடி சேர்ந்து அணியின் எண்ணிக்கைகளை உயர்த்தினர் இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்ததால், பஞ்சாப் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் ஏற்பட்டது.
குறிப்பாக, வெங்கடேஷ் ஐயர் அனைத்து விதமான பந்துகளையும் தடுமாற்றமில்லாமல் எதிர்கொண்டு ஓட்டங்களை குவித்தார். சிறப்பாக ஆடிக்கொண்டு இருந்த ராகுல் திரிபாதி 26 பந்துகளில் 34 ஓட்டங்கள் அடித்து ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் ஹூடாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதேவேளை ரவி பிஷ்னோய் போட்ட கடைசி ஓவரில் வெங்கடேஷ் ஐயர் 49 பந்துகளில் 67 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனைதொடர்ந்து அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் தலைவர் இயான் மோர்கன் 2 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் முகமது ஷமியின் பந்துவீச்சியில் ஆட்டமிழந்தார்.
மேலும் நிதிஷ் ராணா 18 பந்துகளில் 31 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ஓட்டங்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 166 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக தலைவர் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர்.
இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திருந்த நிலையில் மயங்க் அகர்வால் 27 பந்துகளில் 40 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சக்ரவர்த்தி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இதை தொடர்ந்து களமிறங்கிய நிகோலஸ் பூரன், எய்டன் மார்க்கரம், தீபக் ஹூடா சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதனைதொடர்ந்து களமிறங்கிய தமிழக வீரர் ஷாருக்கான் பஞ்சாப் அணியின் கோப்டன் ராகுலுடன் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர்.
இறுதியில் ஒவரில் 5 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருக்கும் போது வெங்கடேஷ் ஐயர் விசிய பந்தில் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 55 பந்துகளில் 67 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினர்.
இதனைதொடந்து இறுதியில் 4 பந்துகளில் 4 ஓட்டங்கள் தேவைப்பட்ட் நிலையில் ஷாருக்கான் சிக்ஸர் அடித்து பஞ்சாப் அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்.
இதேவேளை பஞ்சாப் அணி இக்கட்டான சமயங்களில் கொடுத்த ஐந்து கேட்ச்களையும் கொல்கத்தா அணி தவறவிட்டதே இந்த தோல்வி முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது.
இதன்மூலம் பஞ்சாப் அணி 12 போட்டிகளில் 5 வெற்றிகள் 7 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.