கனடாவில் வாடகைக்கு வீடு தேடிய இளம் தாயாருக்கு ஏற்பட்ட அவமானம்
கனடாவில் லண்டன் நகரில் வாடகைக்கு வீடு தேடும் இளம் தாயார் ஒருவர், தமது திருமணம் தொடர்பான கேள்விகள் கேட்டு பலர் வீடு தர மறுப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.
ஒன்ராறியோவின் லண்டனில் வாடகை வீடு தேடுவது என்பது போராட்டமான ஒன்று என குறிப்பிட்டுள்ள 4 பிள்ளைகளின் தாயாரான Sky Everton, ஆனால் தமது திருமணம் தொடர்பில் பலர் கேள்வி எழுப்புவதுடன், அதன் பின்னர் தமக்கு வீடு தர மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது 3 படுக்கையறை கொண்ட வீட்டில் குடியிருக்கும் Sky Everton, டிசம்பர் 31ம் திகதியுடன் அந்த வீட்டில் இருந்து புதிய வீட்டுக்கு குடியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
வீடு கேட்டு செல்லும் இடத்தில் பலருக்கும் தமது பின்னணி தெரிய வேண்டும் எனவும், ஆனால் தாம் தனியாக வாழும் நான்கு பிள்ளைகளின் தாயார் என தெரியவர பலரும் வீடு வாடகைக்கு விட மறுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, சிலர் தமது பிள்ளைகளின் தந்தை எங்கே என வினவுவதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும், தாம் பூர்வக்குடியை சேர்ந்தவர் என்பதால், அப்படியான தனிப்பட்ட கேள்விகள் எழுப்பப்பட்டதா என்பது தொடர்பில் தமக்கு தெரியாது எனவும்,
ஆனால் லண்டனில் பூர்வக்குடி மக்களுக்கும் இவ்வாறான கசப்பான அனுபவம் ஏற்படத்தான் செய்கிறது என்றார்.