ஆக்சிஜன் டேங்கரில் கசிவு; 22 நோயாளிகள் பலி; மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்!
நாசிக்கில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் டேங்கரில் கசிவு ஏற்பட்டு நோயாளிகள் 22 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள ஜாகிர் உசேன் மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வாயு டேங்கர் உள்ளது. அந்த கசிவை அக்சிஜன் சிலிண்டருக்கு மாற்றிய போது எதிர்பாராத விதமாக திடீரென கசிவு எற்பட்டது.
அப்போது ஒருது டேங்கர் லாரியில் இருந்து மருத்துவமனையில் இருந்த டேங்கரில் ஆக்சிஜன் நிரப்பிக் கொண்டிருந்தனர். இந்த ஆக்சிஜன் கசிவால் 30 நிமிடங்கள் அனைத்து ஆக்சிஜன் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
இந்த 30 நிமிடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு 11 நோயாளிகள் உயிரிழந்துள்ள நிலையில் நேரம் ஆக ஆக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து நாசிக் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், 22 பேர் உயிர் இழந்துள்ள நிலையில் தற்போது நோயாளிகள் ஆக்ஸிஜனை முறையாகப் பெறுகின்றனர் எனத் தெரிவித்தார்.
அத்துடன் ஆக்ஸிஜன் வாயுக்கசிவை கட்டுப்படுத்த தீயணைப்பு துறை வீரர்கள் போராடி வருவதாகவும் கசிவு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், விசாரணை முடிந்ததும் நாங்கள் முழு தகவலை வெளியிடுவோம் என சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கூறினார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனால் மாகராஷ்டிராவில் ஆக்சிஜன் இருந்தும் முறையாக கையாளாததே விபத்துக்கு காரணம் என பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் விபத்து செய்தியைக் கேட்டு மன உளைச்சலுக்கு ஆளானேன். இந்த சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.