ஒட்டுமொத்தமாக இருளில் மூழ்கிய லெபனான்....கடும் அவதிக்குள்ளான மக்கள்
லெபனான் நாட்டில் மின்தேவைக்கான எரிபொருள் முற்றிலும் தீர்ந்ததையடுத்து அந்நாடு முழுவதுமே இருளில் மூழ்கியது.
லெபனான் நாட்டை அனைவரும் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் கூறவேண்டுமென்றால் கடந்த 2020ம் ஆண்டு இடம்பெற்ற நிகழ்வை தான் கூறவேண்டும். அப்போது பெய்ரூட் என்ற பகுதியில் இடம்பெற்ற வெடிவிபத்துக் காரணமாக சுமார் 218 பேர் பலியாகினர் அதுமட்டுமின்றி 7000 அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த வெடி விபத்தின் காரணமாக சுமார் 15 பில்லியன் டொலர் அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பொருளாதார பிரச்சனையில் தவித்து வந்த தற்பொழுது அது மிகவும் வலுப்பெற்றுள்ளது.
அதற்கு கரணம் அந்நாட்டிற்கு மின் உற்பத்தி வழங்கி வந்த துருக்கி தனியார் நிறுவனம் ஒன்று பாக்கி தொகை தராத காரணத்தால் மின் சேவையை நிறுத்தியது.
லெபனான் நாட்டில் உள்ள எரிபொருளைக் கொண்டு போதுமான மின் சேவை வழங்கப்பட்டது. தற்போது எரிபொருள் முற்றிலும் தீர்ந்த காரணத்தால் மொத்த நாடும் இருளில் மூழ்கியுள்ளது.