4 வயது சிறுவனை கடித்துக் குதறி அரை மைல் தொலைவு இழுத்துச் சென்ற சிறுத்தை
நான்கு வயது சிறுவனை திடீரென்று தாக்கி கொன்ற சிறுத்தை ஒன்று காட்டுக்குள் அரை மைல் தொலைவுக்கு இழுத்துச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் வடக்கு காஷ்மீரில் உள்ள ராஜ்போரா ராஜ்வாரில் உள்ள தனது மாமாவின் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தார் நான்கு வயதான மெஹ்ராஸ் ஆசாத் மிர்.
அப்போதே குறித்த சிறுவன் சிறுத்தையால் தாக்கப்பட்டுள்ளார். வீட்டு முற்றத்தில் இருந்து சிறுவனை தமது வாயில் கவ்விக்கொண்டு சென்றுள்ளதாக நேரில் பார்த்த நபர் தெரிவித்துள்ளார்.
ஜூலை 6ம் திகதி நடந்த இச்சம்பவத்தில் சிறுவன் குற்றுயிராக மீட்கப்பட, உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரித்துள்ளன.
சிறுவனின் அலறல் கேட்டு திரண்ட உள்ளூர் மக்களே சிறுத்தையை துரத்திச் சென்று, சிறுவனை மீட்டுள்ளனர். இப்பகுதியில் சிறுத்தைகளின் தாக்குதல் குறித்து அவதானமாக இருக்குமாறு வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளால் உள்ளூர் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஜூன் 2ஆம் திகதி முதல் சிறுத்தை தாக்குதலுக்கு 5 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.