யாழில் கொரோனாவை கட்டுப்படுத்த அனைவரும் இணைவோம்! மேஜர் ஜெனரல்

jaffna corona spread Major General Priyantha Perera
By Shankar Apr 24, 2021 05:39 PM GMT
Shankar

Shankar

Report

அனைவரும் இணைந்து யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவோம் என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா (Priyantha Perera) தெரிவித்துள்ளார்.

இன்று (24.04.2021) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட விசேட கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில், மாவட்ட சுகாதார பணிப்பாளர் மற்றும் யாழ் மாவட்டத்தில் செயற்படும் சுகாதார அதிகாரிகள் மற்றும் சுகாதார பிரிவினருடன் இணைந்து இன்றைய தினம் அரச அதிபர் தலைமையில் ஒரு விசேட கொரோனா ஒழிப்பு தொடர்பான கூட்டத்தை கூட்டி இருந்தோம்.

தற்போது நாட்டில் அதிதீவிரமாக பரவும் கோவிட் நோயினை கட்டுப்படுத்துவதற்கு தேசிய ரீதியாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தல்.

அதேபோல் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளல், வடக்கு மாகாணத்தில் கொரோனா கட்டுப்பாட்டினை

எவ்வாறு பேணுவது தொடர்பில் இன்றைய தினம் ஆராய்ந்த்தோடு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் தொடர்பிலும் ஆராய்ந்தோம்.   

விசேடமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு மக்களை எவ்வாறு இந்த நோயிலிருந்து பாதுகாப்பது தொடர்பாகவும் ஆராய்ந்தோம் அத்தோடு எவ்வாறான நடைமுறைகளைக் கையாள்வதன் மூலம் இந்த தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க முடியும் என்பது தொடர்பிலும் ஆராய்ந்தோம்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கு சுகாதார பரிசோதகர்கள் அத்தோடு யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்களுக்கு ஏற்றவாறாக பொது சுகாதார பரிசோதகர்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தல்

பொது சந்தை, வியாபார நிலையங்கள், மற்றும் பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களில் பொதுமக்களின் ஒன்றுகூடல்களை கட்டுப்படுத்த உரிய செயற்பாடுகளை மேற்கொள்ளல் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தோம்.

மாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் அரச அதிபரின் வேண்டுகோளுக்கிணங்கி மாவட்டத்தில் பொதுமக்கள் ஒன்று கூடுவதை தடுப்பதற்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாகவும் முடிவெடுத்திருக்கிறோம்.

கிராமங்கள் மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் விசேட கூட்டங்களை கூட்டி கிராம மட்ட சுகாதார குழுக்களின் செயற்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, பொதுமக்களை சுகாதார நடைமுறை பின்பற்ற வைப்பதன் மூலம் இந்த தொற்றினை கட்டுப்படுத்தலாம் ஏற்கனவே இராணுவத்தினரால் யாழ்ப்பாண நகரப் பகுதியில் கிருமித்தொற்று நீக்கப்பட்டு சுத்தம் செய்யப் பட்டுள்ளது.

அத்தோடு எம்மால் தொடர்ச்சியாக யாழ்ப்பாண நகரப் பகுதியில் இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

மேலும் பல இடங்களினை இன்றைய தினம் அடையாளப் படுத்தி உள்ளார்கள் அந்த இடங்களும் விரைவில் ராணுவத்தினரால் சுத்தம் செய்யப்பட்டு கிருமித் தொற்று நீக்கும் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படும்.

யாழ் நகரில் வாகனங்களை நிறுத்தும் இடத்தை வேறு இடங்களில் வாகன தரிப்பிடத்தை மாற்றுவதற்கும் இன்றைய தினம் தீர்மானித்தோம் .

அத்தோடு தீவுப்பகுதியில் அதாவது கடற்கரையை அண்டிய பகுதியில் உள்ள மக்கள் மீனவ குடும்பங்கள் சிலரது செயற்பாடுகளின் மூலம் தென்னிலங்கை மீனவர்களின் தொடர்புகளை பேணுவதன் காரணமாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் கொரோனா தீவிரமடைய கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.

எனவே அதனை தடுப்பதற்குரிய வழிமுறை தொடர்பில் இன்றைய தினம் ஆராய்ந்திருந்தோம் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள மீனவர்களுக்கு நான் ஒன்றைக் கூறிக் கொள்ள விடுகின்றேன் நீங்கள் தயவுசெய்து யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களை பாதுகாப்பதற்காக தென்னிந்திய மீனவர்களோடு தொடர்புகளை பேணாதீர்கள்.   

அவ்வாறு தொடர்பினை பேணிகொள்வதன் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தீவிரமடைய கூடிய நிலை காணப்படுகின்றது.

அத்தோடு இந்தியாவில் தற்பொழுது நிலைமை தீவிரமாக அதிகரித்து காணப்படுகின்றது.

அந்த வைரஸ் இங்கு பரவினால்தொற்று தீவிரமடையும் எனவே அந்த விடயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

தற்போது மழை பெய்ததன் காரணமாக யாழ்ப்பாண குடாநாட்டில் டெங்கு தொற்று சற்று அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது அது தொடர்பில் நாங்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தயாராக இருக்கின்றோம்.

எனினும் பொதுமக்கள் சுகாதாரப் பிரிவினர் முப்படையினர் பொலிஸார் ஆகியோர் இணைந்து யாழ் மாவட்டத்தில் கொரோனாவினை கட்டுப்படுத்துவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டினை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என தெரிவித்தார்.   

மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, உடுத்துறை, Toronto, Canada

24 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, பிரான்ஸ், France

24 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், London, United Kingdom

03 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Vitry-sur-Seine, France

12 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US