வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்துக் கொண்ட இளம்பெண்ணின் உருக்கமான கடிதம்!

police girl chennai suicide tamil nadu
By Shankar Jun 27, 2021 09:01 AM GMT
Shankar

Shankar

Report

திருமணமான சில மாதங்களில் இளம் பெண் வரதட்சனை கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம்  தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் 100 சவரன் நகை, ஒன்றரை ஏக்கர் நிலம், கார் போன்றவை போதாது எனக் கூறி இளம் பெண் மருத்துவரை அவரது கணவரும், மாமனார், மாமியாரும் கொடுமை படுத்தியதால், தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் நாடளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தேறியிருக்கிறது.

வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்துக் கொண்ட இளம்பெண்ணின் உருக்கமான கடிதம்! | Letter Of A Young Woman Who Committed Suicide

சென்னை கே.கே.நகரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் திருமணமான நான்கே மாதத்தில் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், தற்கொலை செய்வதற்கு முன்பு இளம் பெண் கண்ணீருடன் கதறிய காணொளியை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் ஜோதிஸ்ரீ. பட்டதாரியான இவருக்கும், திருமுல்லைவாயலை சேர்ந்த எலக்ட்ரீசியனான பாலமுருகன் என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணமானது முதலே கணவரும், மாமியாரும் ஜோதிஸ்ரீயிடன் வரதட்சனை கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.திருமணத்திற்கு பிறகு பாலமுருகன் கடன் பெற்று புதிய வீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.

வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்துக் கொண்ட இளம்பெண்ணின் உருக்கமான கடிதம்! | Letter Of A Young Woman Who Committed Suicide

அந்த கடனை அடைக்க பிறந்த வீட்டில் இருந்து பணம் வாங்கி வரும் படி ஜோதிஸ்ரீயை டார்ச்சர் செய்து வந்துள்ளனர். இதனால் பாலமுருகனை விட்டு பிரிந்த ஜோதிஸ்ரீ தனது பெற்றோர் வீட்டில் தஞ்சம் அடைந்தார்.

கணவர் மனம் மாறியிருக்கக் கூடும் என்ற எண்ணத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஜோதிஸ்ரீ மீண்டும் கணவர் வீட்டிற்கு சென்ற போது, அங்கிருந்த மாமியார் அவரை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை.

கணவரை காண்பதற்காக வீட்டின் முதல் மாடியில் உள்ள அறைக்கு சென்ற ஜோதிஸ்ரீ காத்திருந்த போது, மாமியார் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அறையின் மின் வயரையும் துண்டித்துள்ளார்.

வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்துக் கொண்ட இளம்பெண்ணின் உருக்கமான கடிதம்! | Letter Of A Young Woman Who Committed Suicide

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஜோதிஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தற்கொலை செய்வதற்கு முன்பாக தனது செல்போனில் மாமியார் மற்றும் கணவரின் கொடுமைகளை கண்ணீர் மல்க காணொளி எடுத்தும், கடிதம் மூலம் எழுதி வைத்தும் சென்றுள்ளார் ஜோதிஸ்ரீ.

காணொளியில், தனக்கு நடந்த கொடுமையை விபரித்துள்ளார். ஒற்றை தாலிக்காக பைத்தியம் பட்டம் சுமக்க வேண்டியிருப்பதை வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

செல்போனில் இருந்த காணொளிகளை அழித்த பாலமுருகன் மற்றும் அவரது வீட்டார், ஜோதிஸ்ரீ எதற்காக தற்கொலை செய்துக் கொண்டார் என்பது தெரியாதது போல் நடத்துள்ளனர்.

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த ஆவடி காவல்துறையினர், ஜோதிஸ்ரீ இறந்த ஒரு மாதத்திற்கு பிறகு அவரது செல்போனில் அழிக்கப்பட்ட காணொளியை மீண்டும் மீட்டுள்ளனர்.

காணொளியில் ஜோதிஸ்ரீ தன்னுடைய தற்கொலைக்கு காரணமான கணவரையும் அவரது குடும்பத்தினரையும் விட வேண்டாம் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அதனடிப்படையில் ஜோதிஸ்ரீயின் கணவர் பாலமுருகன், மாமியார், பாலமுருகனின் அண்ணன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US