கனடாவில் பல்பொருள் அங்காடி ஒன்றில் பெண்ணின் அருவருப்பான செயல்: தொற்று பரவல் அச்சத்தில் மக்கள்
கனடாவின் ஆல்பர்ட்டாவில் பல்பொருள் அங்காடி ஒன்றில், பெண் ஒருவர் பொருட்களில் எச்சில் வைத்த சம்பவம் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆல்பர்ட்டாவின் Innisfail பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆனால், குறித்த சம்பவத்தால் வாடிக்கையாளர்கள் எவருக்கும் பாதிப்பில்லை என, நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். அது தொடர்பில் வெளியான காணொளி ஒன்றில், குறித்த பெண் பொருட்களில் எச்சில் வைத்துள்ளதுடன், அதை அவர் உறுதியும் செய்துள்ளார்.
மட்டுமின்றி, கொரோனாவை பரப்ப என்னால் இயன்றது எனவும் அவர் அந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார். அந்த காணொளியானது ஞாயிறன்று மதியம் வரையில் 1 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.
இதனிடையே, அந்த அங்காடி நிர்வாகம், இந்த விவகாரம் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்தில், நடந்த சம்பவத்தில் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும், குறித்த பெண் தொட்டதாக கூறப்படும் அனைத்துப் பொருட்களையும் அப்புறப்படுத்தி, உரிய முறைப்படி கிருமி நீக்கம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால், குறித்த சம்பவம் தொடர்பில் புகார் ஏதும் இதுவரை தங்களுக்கு கிடைக்கவில்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.