இலங்கை குறித்து பாப்பாண்டவரின் அவசர கோரிக்கை
இலங்கையில் அனைவரும் அமைதியை பேண வேண்டுமென புனித பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிகாரிகள் மக்களின் அபிலாஷைகளுக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
வன்முறைகளினால் நாடுகள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் மீது கரிசனை கொண்டுள்ளதாகவும் குறிப்பாக சமூக பொருளாதார அவலங்களுக்காக குரல் கொடுத்த இளைஞர்கள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வன்முறைகளுக்கு இடமளிக்காது அனைவரும் அமைதியை பேணுவதற்கு உதவுமாறு மதத் தலைவர்களிடம் கோருவதாகத் தெரிவித்துள்ளார்.
மக்களின் மனித உரிமைகள் மற்றும் சிவில் சுதந்திரத்தை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.