லண்டனில் 15 வயது சிறுமி மாயம்...வெளியிடப்பட்ட புகைப்படம்
லண்டனில் 15 வயது சிறுமி ஒருவரை மாயமானதையடுத்து தற்போது பொலிஸார் அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
சமந்தா பர்கர் ஹெக்ஸ்ட் என்ற 15 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு காணாமல் போனதாகவும். இந்த நிகழ்வு இடம்பெற்று சுமார் ஒரு வார காலமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சிறுமி லண்டனின் தெற்கு பகுதியில் உள்ள சுட்டான் நகரில் வசித்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இது தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில், மாயமான சிறுமியைக் கண்டுபிடிக்க தங்களுக்கு உதவுங்கள்.
15 வயது சிறுமியான சமந்தா கடந்த 29ம் திகதியன்று சுட்டான் நகரில் தான் காணாமல் போகியுள்ளார். அவரைப்பற்றி ஏதேனும் தகவல் அறிந்தால் தங்களிடம் தெரிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.