சொந்த மகனை நள்ளிரவில் சாலையோரத்தில் கைவிட்ட பெற்றோர்: பதறவைக்கும் சம்பவம்
பிரிட்டனில் தம்பதி ஒன்று தங்களது மகனை நள்ளிரவில் பரபரப்பான சாலையோரத்தில் கைவிட்டு சென்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பிரிட்டனில் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் M11 சாலையிலேயே குறித்த பதறவைக்கும் சம்பவம் நடந்துள்ளது. அந்த இளம் வயது சிறுவன் உதவி நாடும் நோக்கில் இரவு நேரத்தில் சுமார் ஒரு மைல் தொலைவுக்கு தனியாக நடந்து சென்றுள்ளான்.
இறுதியில் அவசர உதவி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு நடந்தவற்றை கூறி உதவி கோரியுள்ளான். தகவல் அறிந்த பொலிசார், துரிதமாக செயல்பட்டு, சிறுவனை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
மட்டுமின்றி, இல்லம் ஒன்றில் சிறுவனை தங்க வைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் குறித்த அதிகாரிகள் தங்கள் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.
M11 சாலையில் எவரும் எதிர்பார்த்திராத சம்பவம் என குறிப்பிட்டுள்ள பொலிசார், அந்த சிறுவன் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியை சேர்ந்தவர் அல்ல எனவும், ,அப்பகுதி அவனுக்கு மிகவும் புதிது எனவும், ஆனால் அவனுக்கு அந்த நேரத்தில் உதவி தேவைப்பட்டது,
அதனால் தங்களை தொடர்பு கொண்டதும், முறையான நடவடிக்கை முன்னெடுத்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது இல்லம் ஒன்றில் அந்த சிறுவன் பாதுகாப்பாக உள்ளான் எனவும், விசாரணைக்கு பின்னர் உரிய முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.