ஐ.எஸ் இயக்கத்தில் இணைய சென்ற லண்டன் இளம்பெண்; பிரித்தானிய பிரதமரிடம் விடுத்த கோரிக்கை
லண்டனில் இருந்து ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைய சிரியாவுக்கு சென்ற பெண் தற்போது பிரித்தானிய பிரதமரிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அதோடு, மீண்டும் நாடு திரும்புவதற்கு அனுமதி வழங்க கோரிக்கை வைத்துள்ளார்.
லண்டனை சேர்ந்த ஷமீமா பேகம் (22) என்ற இஸ்லாமிய பெண், 2015ம் ஆண்டு, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைய, சிரியாவுக்கு சென்றார். அங்கு சென்று, ஐ.எஸ்., அமைப்பில் இணைந்த பேகம், அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவரையும் மணம் முடித்த நிலையில் அவருக்கு பிறந்த, மூன்று குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அஅவரை மீட்ட ராணுவத்தினர் அங்குள்ள அகதிகள் முகாமில், தங்கவைத்த நிலையில் ஐ.எஸ் அமைப்பில் இருந்து விலகி, இதர மக்களைப் போல் வாழ்க்கையை நடத்த எண்ணும் பேகம், மீண்டும் பிரித்தானியாவுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார்.
எனினும், அவரின் குடியுரிமையை ரத்து செய்து, பிரித்தானிய அரசு அறிவித்ததை அடுத்து நீதிமன்றங்களிலும் ஷமீமா முறையிட்டார். எனினும், அவரின் கோரிக்கை நீதிமன்றங்களில் நிராகரிப்பட்டன.
இந்நிலையில், ஒரு செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள ஷமீமா ,
நான் எதை கூறினாலும், அதை சிலர் நம்பமாட்டார்கள் என, எனக்கு நன்றாக தெரியும். நான் இதற்கு முன் எடுத்த ஒவ்வொரு முடிவுக்கும் இன்றுவரை வருந்துகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். பிரதமரிடம் ஒன்றை தெரிவித்துக் கொள்கிறேன்.
பயங்கரவாதத்தை எதிர்த்து போரிட, நான் உங்களுக்கு உதவியாக இருப்பேன். நான் தவறு செய்ததாக நீங்கள் நினைத்தால், என்னை பிரித்தானியாவுக்கு அழைத்துச் சென்று, என்னிடம் விசாரணை நடத்துங்கள். நான் ஐ.எஸ் அமைப்பில் இணைந்து எதையும் செய்யவில்லை என்பது அப்போது எல்லோருக்கும் புரியும் என அவர் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.