லாஸ்லியாவின் இன்ஸ்பிரேசன் இவர்களாம்
கடந்த சில வருடங்களாக மக்களைக் கவர்ந்த நிகழ்ச்சியாக இருப்பது விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியே ஆகும். இந்நிகழ்ச்சியின் 4சீசன்கள் நிறைவு பெற்றிருப்பதும் அடுத்த சீசனுக்காக மக்கள் காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் சீசன் 3இல் இந்தியாவில் மடடுமல்லாது மலேசியா இலங்கை போன்ற நாடுகளிலிருந்தும் பல போட்டியாளர்கள் பங்கு பற்றியமை தெரிந்ததே. அனேக மக்களைக் கவர்ந்த சீசனும் இந்த சீசனே ஆகும்.
இலங்கை தமிழ்ப் பெண்ணான பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் லாஸ்லியா. இவர் இலங்கையில் பிரபலத் தொலைக்காட்சியொன்றில் பத்திரிகை வாசிப்பவராக இருந்தார். அதனைத் தொடர்ந்தே இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார் தற்பொழுது சில படங்களிலும் நடித்த வருகின்றார்.
மேலும் எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் லாஸ்லியாஅவரது அப்பா திடீரென உயிரிழந்த காரணத்தால் சில மாதங்கள் அந்த பக்கமே வரவில்லை. இப்போது மீண்டும் இன்ஸ்டாவில் போட்டோ ஷுட் புகைப்படங்களை பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டார்.
அண்மையில் ஒரு பேட்டியும் கொடுத்துள்ளார். அதில் தனக்கு இன்ஸ்பிரேஷன், சிவகார்த்திகேயன் மற்றும் டிடி தான் என கூறியுள்ளார்.இதனை கண்ட டிடி தனது இன்ஸ்டாவில் லாஸ்லியாவுக்கு வாழ்த்து கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.