அமெரிக்கா - கனடா எல்லையில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி....என்ன காரணம்?
அமெரிக்கா மற்றும் கனடா எல்லையில் இடம்பெற்ற திருமண நிகழ்வு தான் தற்போது சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் புற்கெ(Burke) நகரமும் கனடாவின் கியூபெக்(Quebec) மாகாணத்தையும் இணைக்கும் ஜேமிசன் லைன் எல்லைப்பகுதியில் திருமண நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.
மணமகள் கரேன் மஹோனி மற்றும் மணமகன் பிரைன் ரே ஆகியோர் தான் தங்கள்து திருமணத்தி அமெரிக்கா மற்றும் கனடா எல்லை பகுதியில் நடத்த திட்டமிட்டு தற்போது திருமணமும் செய்து கொண்டுள்ளனர். எல்லை பகுதிதியில் இவர்கள் திருமணம் செய்து கொண்டதற்கும் ஒரு முக்கிய காரணம் உள்ளது. மணமக்கள் இருவரும் சிறு வயது நண்பர்கள்.
அண்மையில் தான் இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். இதனையடுத்து இவர்கள் செப்டம்பர் 25ம் திகதியன்று திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர். ஆனால் அதற்கு முன்பாகவே கனடா மற்றும் அமெரிக்கா எல்லைகள் மூடப்படவுள்ள தகவலை இவர்கள் அறிந்திருந்தனர். எல்லை பகுதி மூடப்பட்ட காரணத்தினால் மணமகனின் குடும்பத்தார் திருமண நிகழ்வில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது.
அதற்கு தீர்வு காணும் வகையில் திருமணத்தை எல்லைப்பகுதியில் நடத்த தீர்மானித்தனர். இந்த மாதிரி எல்லைப்பகுதிகளில் திருமணங்களை ஒருங்கிணைப்பதில் வல்லவரான கரேனின் நண்பர் தான் இந்த ஏற்பாடுகளையும் செய்துள்ளார். அதன்படி திருமண விழா எல்லை பகுதியில் இடம்பெற்றது. இதில் இருவீட்டாரும் பங்கேற்றனர்.
இது குறித்து மணமகன் கரேன் கூறியதாவது, எல்லை பகுதி மூடப்பட்ட காரணத்தினால் திருமணத்தில் எனது 96 வயது பாட்டி பங்கேற்காத சூழல் இருந்தது. இறுதியில் திருமணமே எனது குடுமபதாரின் வரவுக்காக எல்லையில் இடம்பெற்ற நிகழ்வு புது அனுபவத்தைக் கொடுத்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.