7 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்த கொரோனா பாதிப்பு; எங்கு தெரியுமா?
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,712- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று குறைந்துள்ள நிலையில் 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்த கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
உருமாறிய கொரோனாவால் மிகக்கடுமையான பாதிப்பை கடந்த ஆண்டு இங்கிலாந்து எதிர்கொண்டது. இதையடுத்து, கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்திய இங்கிலாந்து, தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைத்ததும் அந்தப் பணியையும் தீவிரப்படுத்தியது.
இதன் பலனாக தற்போது, கடந்த சில வாரங்களாக நோய்த்தொற்று கணிசமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,712- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இது ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்த எண்ணிக்கையாகும்.
அத்துடன் இங்கிலாந்தில் இதுவரை 33.6 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்கிடையே, இங்கிலாந்தில் கொரோனா வைரசின் அடுத்த அலை தாக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளதனால் , மக்கள் வைரசுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் (
Boris Johnson)தெரிவித்துள்ளார்.