கனடாவில் மாயமான தமிழர்; உதவிகோரும் பொலிஸார்
கனடாவில் தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் ரொறன்ரோ பொலிசார் அவரை தேடி வருகின்றனர். அத்துடன் காணம்ல்போன தமிழர் தொடர்பான முழு தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, ஹரிஹரன் விஸ்வலிங்கம் என்ற 55 வயதான நபர் கடைசியாக கடந்த மே மாதம் 31ஆம் திகதி காணப்பட்டார்.
அன்றையதின் கிப்லிங் சுரங்க நிலையத்தில் ஹரிஹரன் கடைசியாக காணப்பட்ட பின்னர் மாயமானார்.
காணாமல் போனவர் அடிக்கடி TTC வாகனங்களில் பயணிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 அடி 7 அங்குலம் உயரம் கொண்ட ஹரிஹரன் சாதாரண உடல்வாகுடன் இருப்பார்.
அதேசமயம் காணாமல் போன போது அவர் எந்த நிறத்தில் மற்றும் எது மாதிரியான உடைகளை அணிந்திருந்தார் என்பது குறித்த தகவல் தெரியவில்லை.
இந்நிலையில் ஹரிஹரன் தொடர்பில் எந்தவொரு தகவல் தெரிந்தாலும் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.