கொரோனா கட்டுப்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த முக்கிய நாடு
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒன்றான டென்மார்க் முதல் நாடாக கொரோனா கட்டுப்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாக அறிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் செவ்வாய் முதல் பொது வெளியில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டாம் என்றும், வேக்சின் பாஸ்பார்ட் நடைமுறை இனி இல்லை என்றும் அரசு அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி பொதுமுடக்கம், இரவு நேர ஊரடங்கு, பார், உள்ளிட்டவை முன்னதாக மூட விதிக்கப்பட்டிருந்த உத்தரவுகளையும் ரத்து செய்துள்ளது டென்மார்க் அரசு.
மேலும் தடுப்பூசியின் வாயிலாக கொரோனா மற்றும் ஒமிக்ரோன் பரவல்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அந்நாட்டு பிரதமர் மெடி பிரடெரிஸ்க்சன் தெரிவித்துள்ளார்.