மலேசியாவில் ஜூன் 1 ஆம் திகதி முதல் முழு ஊரடங்கு
மலேசியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு ஜூன் 1 ஆம் திகதி முதல் முழு ஊரடங்கை அமல்படுத்துவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மலேசிய நாட்டு அரசு அறிவித்த அறிவிப்பில், மலேசியவில் கொரோனா அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து நாட்டில் ஜூன் மாதம் முதல் முழு ஊரடங்கு அமலாக்கப்படவுள்ளது. இந்த ஊரடங்கு ஜூன் 1 ஆம் திகதி முதல் 14 திகதி வரை நீடிக்கும். அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் திறந்தே இருக்கும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,020 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 98 பேர் பலியாகினர். மலேசியாவில் இதுவரை 5,58,534 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். மலேசியாவில் இதுவரை 5% பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது..