நோர்த் யோர்க்கில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
கனடாவின் நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
நோர்த் யோர்க் குடியிருப்பு தொகுதியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
23 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இரண்டு பேர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக நேரில் பார்த்த சாட்சியங்கள் தெரிவித்துள்ளன.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும், சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.