பிரான்சில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய நபர் சுட்டுக்கொலை
பிரான்ஸ் நாட்டில் பொலிஸார் மீது கத்தி குத்து தாக்குதலில் ஈடுபட்ட நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். பிரான்ஸ் நாட்டில் கெனிஸ் நகரில் காவல்நிலையம் ஒன்று உள்ளது.
இந்த காவல்நிலையத்தை சேர்ந்த சில பொலிஸார் இன்று காலை வழக்கமான பாதுகாப்பு பணிக்கு செல்வதற்காக காரில் ஏறி புறப்பட்டுக்கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் இடம்பெற்ற சமயத்தில் மற்றொரு பொலிஸார் துப்பாக்கியால் சுட்டு குறித்த நபரைக் கொன்றார்.
இதனை தொடர்ந்து அப்பகுதியில் அதிக அளவில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த தாக்குதல் எதற்காக நடத்தப்பட்டது, தாக்குதல் நடத்திய நபர் யார் என பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.