ஒன்றோரியா தம்பதி மாயமான வழக்கில் அதிரடி திருப்பங்கள்
ஒன்றோரியோ தம்பதி மாயமான வழக்கில், ஒருவரை கைது செய்துள்ளதாக போலீசார் அறிவித்துள்ளனர்.
கடந்த 18ம் திகதி ஒன்றோரியோவின் மார்க்கம் பகுதியை சேர்ந்த Kristy Nguyen(25) மற்றும் Quoc Tran(37) ஆகியோர் திடீரென்று மாயமாகினர்.
இவர்களை தேடிவந்த போலீசார் திட்டமிட்ட தாக்குதலுக்கு ஆளாகி இருக்கலாம் என தெரிவித்தனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக ரொறன்ரோவை சேர்ந்த Phuong Tan Nguyen என்பவரை தேடி வருவதாகவும் அறிவித்தனர்.
இந்நிலையில் Twin Creeks Landfill and Environmental Centerல் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆணா- பெண்ணா என தெரியவில்லை எனவும் போலீசார் அறிவித்துள்ளனர்.
மற்றொரு சடலமும் விரைவில் கண்டெடுக்கப்படலாம் என கூறிய போலீசார், 36வயது மதிக்கத்தக்க நபரை கைது செய்துள்ளதாக கூறியுள்ளனர்.
வருகிற 14ம் தேதி நீதிமன்றத்தின் முன் குறித்த நபர் ஆஜர்படுத்தப்படலாம் என தெரிகிறது.
இதற்கிடையே Phuong Tan Nguyen-யை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.