தந்தையின் கொலை வழக்கில் சிக்கிய மகன்
வின்னிபெக் பகுதியில் 64 வயது நபரின் கொலை வழக்கில், அவரது மகன் மீது பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
கடந்த 16ம் திகதி காலை 6.20 மணியளவில் Daniel McIntyre பகுதியில் இருந்து கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் வின்னிபெக் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலை அடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார் 64 வயது நபரை சடலமாக மீட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அவர் வின்னிபெக் பகுதியை சேர்ந்த Salvatore Pellettieri என்பவர் என அடையாளம் காணப்பட்டார்.
இந்த நிலையில் விசாரணையை முன்னெடுத்த பொலிசாருக்கு கிடைத்த உறுதியான தகவலின் அடிப்படையில், கத்திக்குத்து சம்பவத்தில் கொல்லப்பட்ட நபரின் 34 வயது மகனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவர் மீது கொலை வழக்குப் பதியப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மேலதிக தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் அறிவித்துள்ளனர்.