ஒட்டாவாவில் இடம் பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் பலி
ஒட்டாவாவில் இடம் பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 25 வயதான நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
லவுரான்ட் பொலிவர்ட் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒமர் ஜொனதன் என்ற 25 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது ஒரு படுகொலை சம்பவம் என்ற அடிப்படையில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.