பிறந்தநாளுக்கு முந்தைய நாள்... சாலையில் உடல் நசுங்கி பலியான இளைஞரின் அடையாளம் காணப்பட்டது
ஒன்ராறியோவின் காலெடன் பகுதியில் சொந்த வாகனத்தின் டயர் மாற்றும்போது, அதே வாகனம் சரிந்து விழுந்து மரணமடைந்த இளைஞரின் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மே 1ம் திகதி மாலை 6:40 மணியளவில் காலெடனில் கிங் ஸ்ட்ரீட் மற்றும் விமான நிலைய சாலைக்கு அருகே இச்சம்பவம் நடந்ததாக அவசர மருத்துவ உதவிக்குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் நடந்த இந்த விபத்து தொடர்பில், அவரது நண்பர்கள் சிலர் தற்போது அடையாளம் கண்டுள்ளனர். 32 வயதான ஜஸ்வந்த் சந்து என்பவரே விபத்தில் சிக்கியவர் எனவும், கடந்த 15 ஆண்டுகளாக உள்ளூர் கிரிக்கெட் அணியில் விளையாடி வருபவர் எனவும் தெரிவித்துள்ளனர்.
சாந்து தமது 33வது பிறந்தநாளுக்கு முந்தைய நாள் துரதிஷ்டவசமாக விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளார். தற்போது சந்துவின் குடும்பத்தாருக்கு உதவும் பொருட்டு, அவரது நண்பர்களில் ஒருவர் பொதுமக்களிடம் இருந்து ஒரே நாளில் சுமார் 70,000 டொலர் தொகையை திரட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சந்து மிகவும் அன்பான நபர் எனவும், நண்பர்களுக்காக எதையும் செய்யத் துணிபவர் எனவும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணை முன்னெடுத்து வருவதாக காலெடன் பொலிசாரும் ஒன்ராறியோ தொழிலாளர் அமைச்சகமும் தெரிவித்துள்ளனர்.