பற்றியெரிந்த அடுக்குமாடி குடியிருப்பு: கரும் புகைக்குள் சிக்கிய முதியவர்
வான்கூவரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று தீ விபத்தில் சிக்கிக்கொண்டதில், 75 வயது நபர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
தீ விபத்து தொடர்பில் தகவல் அறிந்து விரைந்து சென்ற வான்கூவர் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் குறித்த தகவலை உறுதி செய்துள்ளனர்.
சனிக்கிழமை மாலை 6 மணிக்குப் பிறகு கோமொக்ஸ் வீதிக்கு அருகிலுள்ள கில்ஃபோர்ட் தெருவில் அமைந்துள்ள 23 மாடி கட்டிடத்தில் 11வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வீரர்கள் போராடி நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன், குடியிருப்பினுள் சென்று சோதனையிட்டபோது, கரும் புகைக்குள் சிக்கி பரிதாபமான நிலையில் 70 வயது கடந்த ஒருவரை மீட்டுள்ளனர்.
அவருக்கு முதலுதவி அளித்து, உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் இறந்ததாக தகவல் வெளியானது.
தீ விபத்துக்கான உறுதியான காரணம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துள்ள நிலையில், இந்த கட்டத்தில் அது புகைபிடித்தல் தொடர்பானதாகத் தெரிகிறது என தீயணைப்பு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.