நள்ளிரவில் நடந்த கோர சம்பவம்: உடல் நசுங்கி பலியான இளைஞர்
ஸ்கார்பரோ பகுதியில் நள்ளிரவில் பேருந்துடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
குறித்த சம்பவமானது கிங்ஸ்டன் மற்றும் போர்ட் யூனியன் சாலைகளுக்கு அருகில் நள்ளிரவு 1.40 மணியளவில் நடந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிசார் வெளியிட்ட தகவலில், கிங்ஸ்டன் சாலையில் மேற்கு நோக்கி பயணித்தபோது அந்த கார் சாரதி போக்குவரத்து விளக்குகளை மதிக்காமல் பேருந்து மீது மோதியதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவயிடத்திலேயே கார் சாரதி உடல் நசுங்கி மரணமடைந்துள்ளதாகவும், அவருக்கு 20 வயதுக்கு மேல் இருக்கலாம் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மேலும், விபத்தில் ஏற்பட்ட TTC பேருந்து சாரதி காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.
விசாரணை அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருந்தபோது இப்பகுதியில் சாலைகள் சில மணி நேரம் மூடப்பட்டன.