பட்டப்பகலில் நடுங்க வைத்த சம்பவம்: பொலிஸ் குவிப்பால் பரபரப்பு
தென்மேற்கு கல்கரியில் புதன்கிழமை ஒரு நபருடன் அவரது நாயும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் திட்டமிடப்பட்டதாக இருக்கலாம் என பொலிஸ் தரப்பு சந்தேகம் தெரிவித்துள்ளது. பகல் 1.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு தொடர்பில் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்ட நபர் சம்பவ பகுதியில் இருந்து வாகனம் ஒன்றில் தப்பியதாகவும், Cochrane பகுதியில் கேட்பாரற்று கண்டெடுக்கப்பட்ட வாகனம் ஒன்று, இந்த சம்பவத்தில் தொடர்புடையதா என்பது குறித்தும் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதலானது தற்செயலாக நடந்ததாக வாய்ப்பில்லை என குறிப்பிட்டுள்ள பொலிசார், திட்டமிட்ட தாக்குதலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், அப்பகுதி மக்களிடம் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், இன்னும் சில நாட்களில் உடற்கூராய்வுக்கான தகவல் வெளியாகும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.