பாதசாரி ஒருவரை வாகனத்தில் மோதி தப்பிச் சென்ற சாரதி கைது
றொரன்டோவில் பாதசாரி ஒருவரை வாகனத்தில் மோதி தப்பிச் சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
றொரன்டோவின் சேர்ச் வெல்லிஸ்லி கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
36 வயதான பாதசாரியொருவர் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது குறித்த வாகனத்தில் மோதுண்டுள்ளார்.
மோதுண்ட பாதசாரி சுமார் 100 மீற்றர் வரையில் வாகனத்தில் இழுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பலத்த காயங்களுடன் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில், மிஸ்ஸிசாகுவாவைச் சேர்ந்த 25 வயதான சுபாம் ஜோசி என்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.