இந்த நாட்டில் ஆண்களுக்கு அனுமதி இல்லை! பெண்கள் மட்டுமே வாழும் அதிசிய கிராமம்.. என்ன காரணம்?
ஆப்ரிக்க நாடான கென்யாவில் உள்ள உமோஜா கிராமத்தில் பெண்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். பெண்கள் முழு சுதந்திரத்துடன் வாழும் இந்த கிராமத்தில் ஆண்களுக்கு அனுமதி கிடையாது.
மாட்டு சாணம் மற்றும் மண் கலந்து கட்டப்பட்ட மான்யட்டா குடிசைகளால் இந்த கிராமம் நிறைந்துள்ளது. மேலும் பாதுகாப்புக்காக இந்த குடிசைகளை சுற்றி முள்வேலிகள் போடப்பட்டுள்ளன.
பிரிட்டிஷ் ராணுவத்தினரின் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுகளுக்காக 1990ஆம் ஆண்டு இந்த கிராமம் உருவாக்கப்பட்டது.
ஆனால் பின்னர் வீட்டு வன்முறை, பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பெண்கள் இங்கு வாழத் தொடங்கினர்.
இன்றுவரை இங்கு வாழும் பெண்களின் வாழ்க்கை கடினமானதாக இருந்தாலும், அவர்கள் மகிழ்ச்சியாகவே வாழ்கின்றனர். ஏனெனில் ஆண்களின் கொடுங்கோன்மையை அவர்கள் சந்திப்பதில்லை.
உமோஜா கிராமத்திற்கு சென்று பார்வையிட மட்டுமே ஆண்களுக்கு அனுமதி உண்டு. அந்த கிராமத்தில் வசிப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை.
சிறு குழுந்தை முதல் வயதான மூதாட்டி வரை பெண்களின் சொர்க்க பூமியாக இந்த கிராமம் திகழ்கிறது.