கனடாவில், நபர் ஒருவருக்கு குடும்ப இலக்கங்கள் கொண்டு வந்த மாபெரும் அதிர்ஸ்டம்
குடும்ப இலக்கங்களைக் கொண்டு லொத்தர் சீட்டு விளையாடி வந்த நபர் ஒருவர் மாபெரும் பரிசுத் தொகையை வென்றெடுத்துள்ளார்.
கனடாவின் றொரன்டோவைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு பரிசு வென்றுள்ளார். லொட்டோ 6/49 லொத்தர் சீட்டிலுப்பில் ஐந்து மில்லியன் ஜாக்பொட் பரிசு வென்றெடுத்துள்ளார்.
ஒரு தசாப்தத்திற்கு முன்னதாக குறித்த நபர் கனடாவில் குடியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்லன் லிடோ என்ற 43 வயதான நபரே இவ்வாறு பரிசுத் தொகை வென்றெடுத்துள்ளார்.
தனது குடும்பத்திற்கு மிக முக்கியமான திகதிகளைக் கொண்ட இலக்கங்களைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக லொத்தர் சீட்டு விளையாட்டில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
Thanksgiving Day அன்று பரிசுத் தொகை வெற்றி பற்றிய தகவல்கள் தமக்கு கிடைக்கப் பெற்றதாகவும் முதலில் தாம் 5000 டொலர் வெற்றிகொண்டதாகவே கருதியதாகவும் லிடோ தெரிவித்துள்ளார்.
தாங்கள் இந்த பரிசுத் தொகை வெற்றியை நம்பவில்லை எனவும், மீளவும் ஒருமுறை சரிபார்த்துக் கொண்டதாகவும், எத்தனை பூச்சியங்கள் உள்ளது என்பதனை எண்ணியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த லொத்தர் சீட்டு வெற்றியின் மூலம் கிடைக்கும் பணம் குடும்பத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் என லிடோ குறிப்பிட்டுள்ளார்.