ரொறன்ரோ ரீஜண்ட் பூங்காவில் கத்திக்குத்து சம்பவம்: மாயமான பெண்
ரொறன்ரோவின் ரீஜண்ட் பூங்காவில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 50 வயது கடந்த நபர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற சாலையின் கிழக்கே இரவு 10 மணியளவில் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளதாக அவசர மருத்துவ உதவிக்குழுவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார் மற்றும் அவசர உதவிக்குழுவினர் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், பெண் ஒருவர் அந்த நபரை கத்தியால் தாக்கியதாகவும், அவர் வடக்கு பக்கம் நோக்கி மாயமானதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது.
மேலும், அந்த பெண் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட நபரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டால் மட்டுமே இச்சம்பவத்தின் பின்னணி தெரிய வரும் எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.