கனடாவில் கொலைக் குற்றவாளிக்கு நாடு தழுவிய பிடிவிராந்து உத்தரவு
கனடாவில் கொலைக் குற்றச் செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட ஒருவருக்கு எதிராக நாடு தழுபிய அடிப்படையில் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வினிபெக் நகரில் கடந்த மே மாதம் இடம்பெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவரை தேட பொலிஸார் தற்போது பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
2025 மே 23ஆம் திகதி கம்பர்லாண்ட் அவென்யூவின் 300வது பிளாக்கில் காயமடைந்த நபர் ஒருவர் இருப்பதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது அங்கு நிலத்தில் விழுந்த நிலையில் காயங்களுடன் ஒரு ஆண் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்தார்.
அந்த நபர், சாயிசி டீனே பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவரான 39 வயதுடைய ரால்ஃப் மோயிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் டாடூலே ஏரி பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்த கொலை தொடர்பாக 33 வயதுடைய பால் செய்வியர் பொன்னிக் என்ற நபரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த கொலை குற்றச்சாட்டின் அடிப்படையில் கனடா முழுவதும் அளவிலான பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நபர் ஆபத்தானவராக கருதப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பால் பொன்னிக்கின் இருப்பிடம் தொடர்பாக தகவல்கள் உள்ளவர்கள், 204-986-6508 அல்லது 204-786-8477 என்ற எண்களுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.