கனடாவை உலுக்கிய கொடூர குற்றவாளி தொடர்பில் முக்கிய முடிவு
பிரிட்டிஷ் கொலம்பியாவில் 6 பேர் கொண்ட குடும்பத்தை கொடூரமாக கொலை செய்த குற்றவாளிக்கு மீண்டும் பிணை மறுக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில், கடந்த 1982ல் விடுமுறையை கழிக்க சென்ற 6 பேர்கள் கொண்ட ஒரு குடும்பத்தையே தற்போது டேவிட் என்னிஸ் என அறியப்படும் நபர் படுகொலை செய்துள்ளார்.
இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையுடன் 25 ஆண்டுகளுக்கு பிணை வாய்ப்பு இல்லை எனவும் நீதிமன்றம் அறிவித்தது. இந்த நிலையில் பிணையில் விடுவிக்க கோரிக்கை வைத்துள்ள அவருக்கு மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது கனடாவின் பிணை வாரியம்.
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் காம்லூப்ஸ் பகுதிக்கு 120 கி.மீ வடக்கே அமைந்துள்ள பகுதியில் ஜார்ஜ் மற்றும் எடித் பென்ட்லி குடும்பம் விடுமுறையை கழிக்க சென்றுள்ளது.
அப்போது அங்கே திடீரென்று சென்ற டேவிட் என்னிஸ் துப்பாக்கியால் ஜார்ஜ் மற்றும் எடித் பென்ட்லி மற்றும் இவர்களது மகள், மருமகன் ஆகியோரை சுட்டுக்கொண்டுள்ளார்.
மட்டுமின்றி ஜார்ஜின் பேரப்பிள்ளைகள் ஜேனட்(13) மற்றும் கரேன்(11) ஆகிய இருவரையும் தூக்கிச் சென்று ஒருவார காலம் பூட்டி வைத்து துஸ்பிரயோகம் செய்துள்ளார். மேலும் ஒவ்வொருவராக காட்டுப்பகுதிக்கு கூட்டிச் சென்று கொன்றுள்ளார், பின்னர் இருவரது சடலங்களையும் காருக்குள் திணித்து நெருப்பு வைத்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்த 1984ல் அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபணமானது. தொடர்ந்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 25 ஆண்டுகளில் பிணை அனுமதிக்க முடியாது எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
இந்த நிலையில் 2008, 2012 ஆகிய ஆண்டுகளில் டேவிட் என்னிஸ் பிணை கேட்டு மறுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக 2014ல் விண்ணப்பித்தவர் விசாரணைக்கு முன்னர் விண்ணப்பத்தை ரத்து செய்தார். ஆனால் தற்போது நான்காவது முறையாக விண்ணப்பித்த நிலையில் அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.