பிரித்தானியாவில் பயங்கர விபத்து: பெண்ணொருவருக்கு நேர்ந்த சோகம்
பிரித்தானியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள மான்செஸ்டர் நகரத்தில் இரட்டை அடுக்கு பஸ் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (10-07-2022) இரவு இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
மான்செஸ்டர் நகரத்தில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் சம்பவ தினமான நேற்று இரவு மக்கள் சிலர் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இரட்டை அடக்கு பஸ் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்துக்குள் பாய்ந்தது.
இந்த சம்பவத்தில் 50 வயதான பெண் பஸ் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார்.
மேலும் ஒரு பெண் உள்பட 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.