ஜெர்மனியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பலர் மாயம்!
ஜெர்மனியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெர்மனி நாட்டின் ஷுல்ட் நகரில் பெய்து வரும் கனமழையால் நேற்று இரவு முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் 6 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன் , 25க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கிய பலரை ராணுவ உதவியுடன் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு வருகின்றனர். மேலும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 30 பேர் காணமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.