ஒரு மாதத்தில் 4 தடவைகள் திருமணம் செய்த தம்பதி
தாய்வானிலுள்ள ஒரு தம்பதியினர், திருமண விடுமுறை சலுகைகளை கூடுதலாக அனுபவிப்பதற்காக சுமார் ஒரு மாத காலத்தில் 4 தடவைகள் திருமணம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தாய்வான் சட்டங்களின்படி, தம்பதியினர் திருமணம் செய்துகொள்ளும்போது அவர்களுக்கு 8 நாட்கள் விடுமுறை வழங்கப்படும். இந்நிலையில் ஒரு தம்பதியினர் அதிக நாட்கள் இவ்விடுமுறையை அனுபவிப்பதற்காக 4 தடவைகள் திருமணம் செய்துள்ளனர்.
இவர்கள் 37 நாட்களில்; 3 தடவைகள் விவகாரத்து செய்ததுடன் 4 தடவைகள் திருமணம் செய்தனர். இதனால் ஒவ்வொரு திருமண வைபவத்தின் பின் தலா 8 நாட்கள்.
அதாவது மொத்தமாக 32 நாட்கள் விடுமுறையை இவர்கள் கோரினர். இவ்விடுமுறையை வழங்க மறுத்தமைக்காக குறித்த வங்கிக்கு தாய்லாந்து தொழில் திணைக்களம் 20,000 தாய்வான் டொலர்கள் (சுமார். 1.4 இலட்சம் ரூபா) அபராதம் விதித்தது.
ஏனெனில்;, தாய்வான் சட்டங்களின்படி எத்தனை தடவைகள் இத்தகைய விடுமுறையை பெறலாம் என வரையறை செய்யப்படவில்லை.
எனினும், பின்னர், மேற்படி தம்பதியின் மோசடியை உணர்ந்து வங்கிக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை தாய்வான் தொழில் திணைக்களம் வாபஸ் பெற்றது.