கொரோனா தொற்றுடன் மக்கள் வாழ கற்றுகொள்ள வேண்டும்!
கொரோனா வைரஸ் தொற்றுடன் வாழ பொதுமக்கள் கற்று கொள்ள வேண்டும் என பிரபல தொற்று நோய் நிபுணர் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த தொற்று பாதிப்பில் இருந்து உலக நாடுகள் இன்னும் மீளாத நிலை காணப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் University of Maryland யில் தொற்று நோய் பிரிவு தலைவர் பஹீம் யூனுஸ் ஊடகவியாளர்களிடம் அளித்த பேட்டியில்,
கொரோனா வைரஸ் தொற்றுடன் வாழ மக்கள் கற்று கொள்ள வேண்டும். இதற்கு, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான பாதுகாவலை கைவிட வேண்டும் என அர்த்தம் இல்லை.
நாம் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். ஆபத்து சூழலை தவிர்க்க பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள வேண்டும். இசை கச்சேரிக்கோ அல்லது மதுபான விடுதிக்கோ செல்வது இன்றியமையாத ஒன்றல்ல.
ஆனால், நம்முடைய பெற்றோரை கவனிப்பது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது என கூறியுள்ளார்.
நல்ல தரமுள்ள முகக் கவசங்களை அணிவது மற்றும் முழு அளவிலான கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது ஆகியவற்றால் Covid19 தொற்றுடன் நாம் வாழ முடியும். அவை மரணம் ஏற்படாமல் தடுக்கும். வைத்தியசாலையில் சிகிச்சை பெறாமலும் தடுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.