வெளிநாடொன்றில் துப்பாக்கி சூடு: இரு கனேடியர்கள் பலி
மெக்ஸிக்கோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மெக்ஸிக்கோவின் கரீபியன் கரையோரப் பகுதியான Quintana Roo மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த இருவரும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டுக்களும் நிலவி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும் இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மெக்ஸிக்கோ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.